22 December 2009

காதல் கடிதம் 1


காகிதம் இல்லை…
பேனா மை இல்லை
எழுதுகிறேன் உனக்கொரு கடிதம் இங்கு நான்
உன் வருகை கண்டு
கன்னத்து நாண சிவப்பு
வண்ணக்காகிதமாக…
விழிகளின் அசைவுகள்
வார்த்தைகளாக…
ஒவ்வொரு இமைத்துடிப்பும்
சொற்களிற்கு பொருள் தரும் வண்ணம்
இடைவெளிகளாக..
தோன்றிய சின்ன புன்னகைகள்
ஒவ்வொரு வசனத்துக்கும் முற்று புள்ளியாக..
இதயத்தில் ஒவ்வொரு துடிப்பும்
அதிகரிக்கும் வேகம்
என் காதலின் ஆழம் இயம்ப…
பஞ்சு விரல்களில் தோன்றும்
சின்ன நடுக்கம்
என் காதல் சொல்ல தமிழில் வார்த்தைகள்
போதவில்லையே என்ற தவிப்பாக
செல்ல சிரிப்புடன் கவிழும் வதனம்
காகித மடிப்பாக
இதழ் கடித்தேன்
என் அஞ்சலுறை
ஒட்டி கொள்ள
ஒட்டிய வினாடி என்
கண்ணின் கடையில்
துருத்திய ஒற்றை துளி
உன் விலாசம் எழுதியது….
ஆனால் நான் நீட்டிய அஞ்சல் காணாமல்
எனை நீ தாண்டி சென்றாய்..
“மக்கு காதலனே !!! “
என மனதுக்குள் வைது கொண்டேன்.
முதல் காதல் கடிதம் சேரவில்லையே என்ற
தவிப்புடன்…..