எரி மலையும்
பனி மலையும்
ஒரே பூமியில்
சுடும் வெயிலும்
கடும் குளிரும்
ஒரே நாளில்
வன் முள்ளும்
மென் மலரும்
ஒரே செடியில்
பணக்காரனும்
பிச்சைகாரனும்
ஒரே தெருவில்
கடவுளும்
கல்லும்
ஒரே சிலையில்
சேறும்
தாமரையும்
ஒரே குளத்தில்
காந்தியும்
கோட்சேயும்
ஒரே நாட்டில்
கண்ணீரும்
புன்னகையும்
ஒரே வாழ்க்கையில்
முரண்களுக்குள் மட்டும்
முரண்கள் இல்லை