29 November 2010

ஒருதலை வலி


என் கனவுகளுக்குள் நீ
என் கவிதைகளுக்குள் நீ

என் கண்ணிமைகளுக்குள் நீ
என் கண்ணீருக்குள் நீ

என் தனிமைகளுக்குள் நீ
என் தவிப்புகளுக்குள் நீ

என் கோபங்களுக்குள் நீ
என் புன்னகைகளுக்குள் நீ

கானலால் ஒரு சாரலாய் நீ
ஒருதலையாய் உறவிழந்த
உயிர் வலியாய் நான்!!!

சொற்களுக்கிடையில் மௌனமாயும்
மௌனங்களுக்குள் சொற்களாயும்
செல்லரிக்கிறது என் காதல்!!

நிறுத்தாமல் பேசும்
நீ பேசுவதை
நிறுத்தியதால்
மௌனத்தில் கூட
உளறுகிறேன்!!!