
காரிருளில் வானவில்
குருடன் கவிஞனான போது..
அலை கடலில் தித்திப்பு
தண்ணீரெல்லாம் உப்பாகிய போது..
மௌனம் கூட தாலாட்டு
ஊமை அன்னையாகிய போது..
பட்டாம் பூச்சி கூட காதலன்
பூக்கள் காதல் கொண்ட போது…
பஞ்சு தலையணை கூட முள் மடி
மனைவி ஊடல் கொண்ட போது…
தூறல் கூட மழை தெய்வம்
விவசாயியின் பயிர் உடல் நனைத்த போது..
தனிமையெல்லாம் நரகம்
பள்ளி விடுமுறையில் நட்பு பிரிந்த போது..
நட்பெல்லாம் நரகம்
புதிதாக வந்த காதல் உடல் சிலிர்த்த போது…
மூச்சு காற்று கூட ரகசியம்
கன்னிக்கு காதல் வந்த போது….