28 November 2010

தயக்கம்


சாத்தியங்கள் காறி உமிழ்ந்தன
சந்தர்ப்பங்கள் கதவடைத்தன
ஐந்தடிக்குள் அடங்கிய
எலும்பும் சதையும்
சொன்ன தீர்வு
கூசாமல் கூவி வில்
அழகான மேனியை…

அவள் தாழிட்ட கதவுக்குள்
யாரோ மனைவியரின் கனவுகள்
யாரோ மழலைகளின் புன்னகைகள்
யாரோ தாய்களின் நம்பிக்கைகள்
மரித்தன

சரியா தவறா போராட்டத்துக்குள் அவள்
தாழிட்ட கதவை மறுபடியும்
எவனோ தட்டுகிறான்
தயங்குகிறாள்..
ஆனாலும் திறக்கிறாள்!!!
அவளை தியாகி என்ன
சாதாரண மனுசியாக கூட
ஏற்க மனிதரில்லை
என்பது உண்மை தானே
அவளது அந்த சிறு தயக்கம்
அவள் வைக்க நினைத்த முற்று புள்ளி!!