18 September 2010
மலடியின் நீ
நீர் எழுத்தா நீ
நிறமிழந்த வானவில்லா நீ
என் வானில் ஒளியிழந்த
விடிவெள்ளியா நீ
என் இதழ்கள் மறந்த
புன்னகையா நீ
என் விழிகள் சுமக்கும்
உப்பு திராவகமா நீ
என் கைகளுக்குள் அடங்காத
மென்காற்றா நீ
என் ஆறாம் அறிவு தீண்டாத
அதிசயமா நீ
என் சொந்தமாகாத
பந்தமா நீ
இளம் காலைகளில் என்
துயில் கலைகையில்
தொலைந்து போகும்
தேவதையா நீ..
யார் நீ???
மலடியின் மடி அறியாத
ஒரு மகள்...
+++++++++++++
அவளும் இவளும்
ஐந்து வயதில் கற்ற அரிசுவடி
எட்டு வயதில் இறக்கிய இளஞ்சோறு
பதினெட்டு வயதில் பெற்றவர் மணக்கூலி கொடுக்க
உற்றவன் புனைந்த பொற்தாலி
இருபது வயதில் இடுப்பில் சிரித்த மகவு
இலக்கணத்தின் அழகி அவள்…
ஐந்து வயதில் ஐபாட்
எட்டு வயதில் கைபேசி
பத்து வயதில் மடிகணினி
பதினெட்டு வயதில் மம்மி டாடி
டம்மியாக
காதலுக்கும் நட்புக்கும் இடையில்
காதில் கடுக்கனுடன்
நின்ற ஏதோ ஒன்றின் காதலி
அழகின் புது இலக்கணம் இவள்…
Subscribe to:
Posts (Atom)