
வார்த்தைகள் இல்லாத
ஏழையாய் நான்….
வார்த்தைகள் கொள்ளாத
மௌனமாய் நீ…
இந்த விடியலும் உறக்கமில்லாமல்
விடிய
இரக்கமில்லாமல்
என் இரவுகளை கொல்லும்
ராட்சசனா நீ...
வெண் தாளாகி வினாக்களாய்
காத்திருக்கிறேன்…
வண்ணம் கொண்ட ஓவியம் வேண்டாம்
சில வார்த்தையேனும் எழுதி செல்…