இடியும் மின்னலும்
கலந்து களிக்கையில்
விரிந்த குடை…
கல்லும் மரமும்
கலந்து உதிர்க்கையில்
புளித்த மாங்காய்…
வார்த்தையும் உதடுகளும்
கலந்து மௌனிக்கையில்
பேசிய கடிதம்…
புல்லும் பனியும்
கலந்து உறங்கையில்
குளிர்ந்த முத்தம்…
மூச்சும் பேச்சும்
கலந்து ஸ்தம்பிக்கையில்
வலித்த பிரிவு…
இசையும் இதயமும்
கலந்து கனக்கையில்
உதிர்ந்த கண்ணீர்…
பேனாவும் காகிதமும்
கலந்து கிறுக்கையில்
பிறந்த கவிதை…