28 December 2010
நீ தந்தவை…
இடியும் மின்னலும்
கலந்து களிக்கையில்
விரிந்த குடை…
கல்லும் மரமும்
கலந்து உதிர்க்கையில்
புளித்த மாங்காய்…
வார்த்தையும் உதடுகளும்
கலந்து மௌனிக்கையில்
பேசிய கடிதம்…
புல்லும் பனியும்
கலந்து உறங்கையில்
குளிர்ந்த முத்தம்…
மூச்சும் பேச்சும்
கலந்து ஸ்தம்பிக்கையில்
வலித்த பிரிவு…
இசையும் இதயமும்
கலந்து கனக்கையில்
உதிர்ந்த கண்ணீர்…
பேனாவும் காகிதமும்
கலந்து கிறுக்கையில்
பிறந்த கவிதை…
Subscribe to:
Post Comments (Atom)
கற்பனைகளும்
ReplyDeleteபொய்களும்
உறவாடிப் பிறக்கின்றன
பல கவிக்குழந்தைகள்..
இன்னும் பிறக்கும் .... இனிக்கும் கவிதைகளாய்!
ReplyDeleteகாதல் மணம் கமழும் கவிதை!
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு....
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னோட பதிவுகள் அனைத்திற்கும் மறக்காமல் ஓட்டு போடுங்க தலைவா...
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...