24 January 2010

தேவதை


புல்வெளி நான்,
அதில் தூங்கும் பனித்துளி நான்
மழை துளி நான்,
அதில் நனையும் வானவில் நான்
ஆழ்கடல் நான்,
அதில் துயிலும் முத்து தரளங்கள் நான்
தென்றல் உலவும் சோலை நான்,
புயல் சுழலும் பாலையும் நான்.
மலைகள் சொரியும் நீர் வீழ்ச்சிகள் நான்,
பின் மெல்லென செல்லும் நதி மகள் நான்.
பசிய வயல் வெளி நான்,
அங்கு தலை சாயும் கதிர் தாங்கும் நிலமும் நான்
பூவிதழ் நான்,
பொன்னிலையும் நான்
இறைவன் பூமிக்கென்று அனுப்பிய
மெல்லிய தேவதை நான் இயற்கை...
செயற்கை கொண்டு வதைக்காதீர்
வலிக்கிறது