18 September 2010

மலடியின் நீ



நீர் எழுத்தா நீ
நிறமிழந்த வானவில்லா நீ
என் வானில் ஒளியிழந்த
விடிவெள்ளியா நீ
என் இதழ்கள் மறந்த
புன்னகையா நீ
என் விழிகள் சுமக்கும்
உப்பு திராவகமா நீ
என் கைகளுக்குள் அடங்காத
மென்காற்றா நீ
என் ஆறாம் அறிவு தீண்டாத
அதிசயமா நீ
என் சொந்தமாகாத
பந்தமா நீ
இளம் காலைகளில் என்
துயில் கலைகையில்
தொலைந்து போகும்
தேவதையா நீ..
யார் நீ???
மலடியின் மடி அறியாத
ஒரு மகள்...



+++++++++++++

No comments:

Post a Comment