05 January 2010

மார்க்கண்டேயன்



வெண்மை நாணிய தண் மலர் ஒன்று
பாலனவனின் கையில் இருந்து
இமை சிறகுகள் விடை பெற்ற வினாடிக்குள்
செஞ்சூரிய வண்ணம் பூசி மண் கவிழ்ந்தது
காலனவனின் பாசக்கயிறு
எறிகணைகளாகியதால்
மலருக்கு புது நிற பதிப்பு
மலர் சுமந்த சின்னவன்
மார்க்கண்டேயனின் மறுபதிப்பு இல்லையே????
மண் கவிழ்ந்தான் மலரை போலவே
புன்னகை இழந்த புது சிவப்புடன்...

4 comments:

  1. நல்லாருக்கு...(ஆமா ஸ்ரைலா பைக்ல போறதா இருந்தீங்களே என்னாச்சு?)

    ReplyDelete
  2. அதான் முட்டி உடஞ்சிடும் எண்டாச்சில்ல…பிறகென்ன செய்ய??? மாட்டு வண்டிலில போலாம்னு முடிவெடுத்திட்டன்....:)

    ReplyDelete
  3. மிகவும் நன்றாக இருக்கிறது..
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete