07 January 2010
மௌனம்
மொட்டு அகம் சுமந்த மௌனம்
மலரில் சுகந்தமானது
கரு வானம் கதிரிழந்த மௌனம்
மண் நனைந்த துளியானது
கவி கரம் கனிந்த மௌனம்
கவிதையாக தாள் நனைந்தது
ஆழ்கடல் வெண்சிப்பி சேமித்த மௌனம்
முத்தாக கடல் கவர்ந்தது
கருங்குயிலின் இலையுதிர் கால மௌனம்
வசந்தத்தில் கீதமாகியது
உறங்கிய விழிகளின் மௌனம்
கனவாகி காட்சியானது
இயலாமை கொண்ட மௌனம்
ஏழ்மையில் பசியாகியது
இதய இடுக்குகளில் காதல் கருக்கொண்ட மௌனம்
மட்டும்
வார்த்தையின்றி மௌனமாகவே மௌனித்தது
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாருக்கு......
ReplyDeleteஅருமைய்யா.. அரும!!
ReplyDeleteகவிதை நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவார்த்தை இன்றி மௌனிக்க விட்டுவிடாதீர்கள் வார்த்தை சொல்லி மௌனித்தால் பரவாயில்லை.