24 January 2010
தேவதை
புல்வெளி நான்,
அதில் தூங்கும் பனித்துளி நான்
மழை துளி நான்,
அதில் நனையும் வானவில் நான்
ஆழ்கடல் நான்,
அதில் துயிலும் முத்து தரளங்கள் நான்
தென்றல் உலவும் சோலை நான்,
புயல் சுழலும் பாலையும் நான்.
மலைகள் சொரியும் நீர் வீழ்ச்சிகள் நான்,
பின் மெல்லென செல்லும் நதி மகள் நான்.
பசிய வயல் வெளி நான்,
அங்கு தலை சாயும் கதிர் தாங்கும் நிலமும் நான்
பூவிதழ் நான்,
பொன்னிலையும் நான்
இறைவன் பூமிக்கென்று அனுப்பிய
மெல்லிய தேவதை நான் இயற்கை...
செயற்கை கொண்டு வதைக்காதீர்
வலிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாருக்கு. வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇயற்கை வளங்கள் அழிவது பற்றி கூறியிருக்கிறீர்கள்
ReplyDeleteநல்ல சிந்தனை...!
வதைக்கா<தே
ReplyDeleteநன்றி நண்பர்களே...:)
ReplyDelete