26 August 2010

துளிகள்


உன்னுடன் நான் சிந்திய
ஒரு துளி கண்ணீர்...
உன்னிடம் நான் அறிந்த
ஒரு துளி வெட்கம்...
உன்னுடன் நான் திளைத்த
ஒரு துளி மௌனம்...
உன்னிடம் நான் அறிந்த
ஒரு துளி பெண்மை...
உன்னுடன் நான் இருந்த
ஒரு துளி தனிமை...
உன்னிடம் நான் உணர்ந்த
ஒரு துளி மென்மை...
உன்னுடன் நான் கண்ட
ஒரு துளி கனவு...
உன்னிடம் நான் இழந்த
ஒரு துளி நான்...
துளி துளியாய் என்னில்
சிதறிய
துளி மழை நீ
தொலைந்து போனதால்
தரிசானேன் நான்….
அன்று சிலிர்த்த ஆசைகள்
இன்று செல்லரித்த துகள்களாய்…
நிதமும் நான் அலறும்
மௌன கதறல்கள்
உன் சுவடுகள்
எனக்குள் பதித்த வலி…

2 comments:

  1. love it tharshy but then am i missing out something?

    ReplyDelete
  2. //உன்னிடம் நான் இழந்த
    ஒரு துளி நான்...//

    ரசித்தேன்

    ReplyDelete