26 March 2014

மனிதன்



தெப்பைகுள தாமரை அழகுணராது
வன்புணர்ந்த நுணலானான்
காமவெறி கொண்ட போது…

மின்சார கம்பிகளில் கூடு
கட்டி கொண்ட பறவையானான்
தன் மனை துறந்து பிறன் மனை புகுந்த போது…

விடம் கக்கும்
அரவமானானான்
நச்சு வார்த்தைகள் நா கொண்ட போது…

இடி மழை மின்னல்
உணராத எருமையானான்
சுய கௌரவ சங்கிலிகள் அறுத்த சேவகனான போது…

விளக்கினை நாடும்
விட்டிலானான்
வேசி வீட்டில் வாசம் கொண்ட போது…

கட்டுங்கடாத
காளையானான்
சுயம் சொல்லும் பயம் மறந்த போது…

ஒரிரு தருணங்களில்
ஆறறிவு கொண்ட
மனிதனுமானான்
வலி உணர்ந்த போது….

சலிக்காதவரை முத்து
தெரிவதில்லை
வலிக்காதவரை வாழ்வு
தெரிவதில்லை

No comments:

Post a Comment