24 September 2010

முரண்கள்


எரி மலையும்
பனி மலையும்
ஒரே பூமியில்

சுடும் வெயிலும்
கடும் குளிரும்
ஒரே நாளில்

வன் முள்ளும்
மென் மலரும்
ஒரே செடியில்

பணக்காரனும்
பிச்சைகாரனும்
ஒரே தெருவில்

கடவுளும்
கல்லும்
ஒரே சிலையில்

சேறும்
தாமரையும்
ஒரே குளத்தில்

காந்தியும்
கோட்சேயும்
ஒரே நாட்டில்

கண்ணீரும்
புன்னகையும்
ஒரே வாழ்க்கையில்

முரண்களுக்குள் மட்டும்
முரண்கள் இல்லை

5 comments:

  1. இதே வரியில் இன்பமும் துன்பமும் மனிதனுக்கு தான்.....மிகவும் அருமை .
    உங்கள் தமிழ்புலமை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் தொடர்க.

    ReplyDelete
  2. இதே போன்ற ஒரு கவிதை சில மாதங்களுக்கு முன் நான் ஒன்று எழுதினேன்...
    யூத்புல் விகடன் -நில் கூட வந்து உள்ளது ....
    http://thanikaatturaja.blogspot.com/2010/06/blog-post_08.html

    ReplyDelete
  3. ஆஹா என்ன அருமையான கவிதை
    தமிழ் வாழ்க
    இலங்கையில் இருந்து யாதவன்

    ReplyDelete
  4. ஆஹா என்ன அருமையான கவிதை
    தமிழ் வாழ்க
    இலங்கையில் இருந்து யாதவன்

    ReplyDelete
  5. கவிதை நல்லா இருக்குங்க.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete