முரண்கள்
எரி மலையும்
பனி மலையும்
ஒரே பூமியில்
சுடும் வெயிலும்
கடும் குளிரும்
ஒரே நாளில்
வன் முள்ளும்
மென் மலரும்
ஒரே செடியில்
பணக்காரனும்
பிச்சைகாரனும்
ஒரே தெருவில்
கடவுளும்
கல்லும்
ஒரே சிலையில்
சேறும்
தாமரையும்
ஒரே குளத்தில்
காந்தியும்
கோட்சேயும்
ஒரே நாட்டில்
கண்ணீரும்
புன்னகையும்
ஒரே வாழ்க்கையில்
முரண்களுக்குள் மட்டும்
முரண்கள் இல்லை
இதே வரியில் இன்பமும் துன்பமும் மனிதனுக்கு தான்.....மிகவும் அருமை .
ReplyDeleteஉங்கள் தமிழ்புலமை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் தொடர்க.
இதே போன்ற ஒரு கவிதை சில மாதங்களுக்கு முன் நான் ஒன்று எழுதினேன்...
ReplyDeleteயூத்புல் விகடன் -நில் கூட வந்து உள்ளது ....
http://thanikaatturaja.blogspot.com/2010/06/blog-post_08.html
ஆஹா என்ன அருமையான கவிதை
ReplyDeleteதமிழ் வாழ்க
இலங்கையில் இருந்து யாதவன்
ஆஹா என்ன அருமையான கவிதை
ReplyDeleteதமிழ் வாழ்க
இலங்கையில் இருந்து யாதவன்
கவிதை நல்லா இருக்குங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்