
சிற்பமாகையில் சிதைக்கும் சுத்தியல்களாய்
சித்திரமாகையில் வெட்டியெறியும் கத்திரிகளாய்
பறவையாகையில் பாய்ந்திழுக்கும் ஓநாய்களாய்
மலராகையில் கடித்து குதறும் மந்தைகளாய்
சில வக்கிர மானுடங்கள்…
போராடினோம்… மன்றாடினோம்…
வக்கிரங்கள் வஞ்சித்தன
உக்கிரங்கள் உயிர்த்தெழுந்தன
கெக்கலித்தன கிலியூட்டின
போராட்டம் இழந்து
மண்ணில் சரிந்து
சாம்பலில் கலந்தோம்..
வக்கிரங்கள் கும்மாளமிட்டன
குதித்தாடின!!
செதுக்கிய உளியும்
தீட்டிய தூரிகையும்
பறக்க வைத்த சிறகுகளும்
மொட்டவிழ்த்த தென்றலும்
அழுது கொண்டிருந்தன
கலைந்த கனவுகளுக்காய்!!
உலகம் உறங்கையில் உறங்காத வஞ்சம்
நம் கல்லறைத் தோட்டங்களுக்கு காவலாய்!
என்ன சொல்ல வருகிறீர்கள் கொற்றவை?
ReplyDelete